யாழ்ப்பாணத்தில் இருந்து புதியவர்களே நாடாளுமன்றம் செல்வதற்கு அதிக வாய்ப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து புதியவர்களே நாடாளுமன்றம் செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சர்வஜன அதிகாரம் கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

சர்வஜன அதிகாரம் கூட்டணியின் மக்கள் சந்திப்பு நேற்று(20) பிற்பகல் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது மக்கள் மக்களிடம் உரையாற்றும் போதே அருண் சித்தார்த் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நெற்றியில் பட்டை தீட்டி, வெட்டி சால்வையுடன் பாராளுமன்றம் சென்றவர்கள், பார் லைசன்ஸ் பெற்றுக் கொண்ட கொள்ளவே சென்றார்கள்.

இப்படியான போலி தேசிய வாதிகள் நிராகரிக்கப்பட வேண்டும். எங்கள் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் எங்களுக்கு எதிராக எங்கள் குடும்பத்தின் தலைவர் குடிப்பதற்கு மூலை மூலையாக, பார் எடுத்துக் கொடுத்து அவர்கள் குடித்துவிட்டு எங்களுக்கு அடிக்கும் செயற்பாடு சுற்றி வருகின்றது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்

Recommended For You

About the Author: admin