தற்காலத்துக்கு தேவையான தமிழ்த்தேசியவாதியாக நான் சிந்திக்கிறேன்.

தமிழர்களின் இருப்பை பாதுகாக்காமல் தமிழ்த்தேசியம் சாத்தியமடையாது. 9லிருந்து 6 ஆக எங்களது பிரதிநிதித்துவத்தை வீழ்ச்சியடையச் செய்ததுதான் தமிழ்த்தேசியவாதிகள் என சொல்லிக்கொண்டிருப்பவர்கள் செய்த சாதனை.

மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கியதாகவே எனது அரசியல் பயணம் உள்ளது.

இதுவே தமிழர்களின் இருப்பை உறுதிசெய்யும்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறை தொகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்புகளின் போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக தேசியக்கூட்டணியின் யாழ் மாவட்ட தலைமை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்

Recommended For You

About the Author: admin