கொத்மலை தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டன: தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!

கொத்மலை காமிணி திசாநாயக்க தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டியதை அடுத்து, இன்று (09) மாலை 7.00 மணியளவில் தேக்கத்தின் வான் கதவுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளன.

விநாடிக்கு சுமார் 20 கனமீட்டர் வேகத்தில் மேலதிக நீர் கொத்மலை ஓயாவுக்கு திறந்து விடப்படுவதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் பிரதான அணைக்கட்டு மற்றும் தேக்க செயல்பாட்டுப் பிரிவு தெரிவிக்கம் செய்துள்ளது.

இதன்காரணமாக கொத்மலை ஓயா மற்றும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் சிறிதளவு உயரக்கூடும் என்பதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் இதுகுறித்து அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin