ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார வெற்றி: பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றுள்ளதாகவும், அரசியலில் நாமல் ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அனுரகுமார திசாநாயக்க தேர்தலில் வெற்றி பெற்றார். நாமல் ராஜபக்ச அரசியலில் வெற்றி பெற்றார். மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்போம். தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்தது.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து எமது சித்தாந்தத்தை முன்னெடுப்பதற்கு நான் அர்ப்பணிப்புடன் உள்ளேன். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.”

மிலிந்த ராஜபக்ச தற்போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக பணியாற்றி வருவதுடன், 2021 ஆம் ஆண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin