அனுரவிற்கு பலரும் வாழ்த்து: தோல்வியையும் ஒப்புக்கொண்டனர்

தபால்மூல வாக்குகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க முன்னிலை வகிக்கின்றார்.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஒப்புக்கொண்டுள்ளதோடு அனுரகுமார திசாநாயக்கவிற்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என நம்பப்படும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தனது வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார்.

‘இன, மத வெறிகளைத் தூண்டாமல் சிறப்பாக வெற்றி பெற்ற #அனுரவிற்கு எமது வாழ்த்துக்கள். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையை ஏற்று, மற்றைய வேட்பாளர்களை நிராகரித்து #சஜித்துக்கு வாக்களித்து தேர்தல் வரைபடத்தில் ஒரு வித்தியாசத்தைக் காண்பித்த வட கிழக்கு தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin