ஊழலை உண்மையாக கையாள்வதற்கு தலைவர்கள் தயாராக இல்லை !

இலங்கை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரினார் என ஜப்பான் குற்றம் சாட்டியதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்தபோது, ஜப்பானிடம் குறித்த அமைச்சர் இலஞ்சம் கோரியதாக விஜயதாச ராஜபக்ஸ, தெரிவித்துள்ளார்
இந்தக் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே கோட்டாபய ராஜபக்ச, குறித்த அமைச்சரை பதவி நீக்கியதாகவும் அவர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பதாகவும் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் ஊழலை உண்மையாக கையாள்வதற்கு தலைவர்கள் எவரும் தயாராக இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin