போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு புனர்வாழ்வு மையம் ஆரம்பம்

போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையத்தில் 100 பெண்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நீதிமன்ற உத்தரவுப்படி போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களுக்கு இந்த மையம் மூலம் மறுவாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை வவுனியாவில் அமைந்துள்ள இந்த புதிய புனர்வாழ்வு நிலையத்திற்கு புனர்வாழ்விற்காக பரிந்துரைக்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவித்துள்ளது

Recommended For You

About the Author: admin