இந்தியா உலகிற்கு அமைதியையும் வளர்ச்சியையுமே கொடுக்கின்றது: நரேந்திர மோடி

இந்தியா எப்போதும் உலகிற்கு அமைதி மற்றும் வளர்ச்சியை கொடுக்கிறது. இதனால் 21ம் நூற்றாண்டில் இந்தியா வலிமைபெற்று வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தாம் உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளதாகவும், யுத்தத்தை கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒஸ்ட்ரியாவுக்கு விஜயம் செய்திருந்த போது, அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அதன் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், பல ஆயிரம் ஆண்டுகளாக தாம் தமது திறமை, அறிவை பகிர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக ஓஸ்திரியாவுக்கு சென்றிருந்த நிலையில் இன்று காலை டெல்லிக்கு திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin