ஒருதலைக் காதல் சந்தேகம் – பேருந்து நிலையத்தில் 21 வயது இளம்பெண் உயிரிழப்பு!

இந்தியாவின் கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள பந்த்வால் (BC Road) KSRTC பேருந்து நிலையத்தில், 21 வயதான லாவண்யா என்ற இளம்பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🏥 தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த லாவண்யா, வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

👤 ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, அவரது தூரத்து உறவினரான சேதன் (22), ஒருதலைக் காதல் காரணமாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும், பேருந்திலிருந்து இறங்கிய பிறகு கூரிய ஆயுதத்தால் தாக்கியதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

🚑 படுகாயமடைந்த லாவண்யா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

👮 சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் சென்ற சந்தேகநபர் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையின்போது அவர் விஷம் அருந்தியதாகக் கூறப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

⚖️ இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை கர்நாடக பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin