அவுஸ்திரேலியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்புப் பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ள ஒப்பந்தம் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
தங்களின் யுரேனியத்தை விற்பனை செய்ய பிடிவாதமான கொள்கையை ஆஸ்திரேலியா நீண்டகாலமாகக் கடைப்பிடித்து வந்தது. இந்தியா மிக இணக்கமான உறவை வளர்த்துக் கொண்டநிலையில் ஆஸ்திரேலியா தனது விதிகளைத் தளர்த்தியுள்ளது.

