பிரேஞ்சு ஓபன் டென்னிஸ்: கால் இறுதிக்கு தகுதியான ஜோகோவிச்

பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் பாரிஸில் நடைபெற்று வருகிறது.

அதில், உலகின் முதல் நிலை வீரரும் 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவருமான செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் நான்காவது சுற்றில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவுடன் மோதினார்.

இந்தப் போட்டியில் 6-1,5-7,3-6 7-5,6-3 என்ற செட் கணக்கில் வெற்றியீட்டி கால் இறுதிச் சுற்றுக்கு தகுதியானார் ஜோகோவிச்.

அத்துடன் 4ஆவது வரிசையிலுள்ள ஜேர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் சுவரேவ், 7ஆம் நிலை வீரரான நோர்வேயைச் சேர்ந்த கேஸ்பர் ரூட் ஆகியோரம் கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

5ஆம் நிலை வீரரான ரஷ்யாவைச் சேர்ந்த மெட்வதேவ் 4ஆவது சுற்றில் தோல்வியடைந்தார். பெண்கள் பிரிவின் கால் இறுதி சுற்றி இன்று நடைபெறுகிறது.

Recommended For You

About the Author: admin