சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கும் நிலையில் அந்த இடத்தை நிரப்ப டாப் சீரியலின் நேரத்தை சன் டிவி மாற்றியுள்ளது.
எதிர்நீச்சல் தொடர் நிறைவடையவுள்ளதை இத்தொடரில் உள்ள நடிக்கும் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்த தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நிறைவாக ஒரு புன்னகை’ என பதிவிட்டுள்ளார்.
மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், எதிர்நீச்சல் முடிவடையும் நிலையில், இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சிங்கப்பெண்ணே தொடர் இனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
இரவு 8 மணிக்கு இனி புதியதாக தொடங்கி இருக்கும் மருமகள் தொடர் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.