வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17.07.2026) அம்மனுக்குரிய மாதமான ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு ஆடி மாதப் பிறப்புச் சங்கிராந்த தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் அதிகாலை-05.30 மணியளவில் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி காலை-06 மணியளவில் ஆடி மாதப் பிறப்புச் சங்கிராந்தி தீா்த்த உற்சவம் ஆரம்பமாகி இடம்பெறும்.
ஆடி மாதத்தில் அம்பாள் வழிபாட்டின் மகிமை எனும் தலைப்பில் ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர், கலாநிதி.ஆறு.திருமுருகன் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவார்.

