வாடகை வீடுகள், அறைகளில் தங்கியிருந்து குற்றச்செயல்கள்

நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ள 1,78,613 பேர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா? என்பதை ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கமைய, இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 37,183 குடும்பங்களைச் சேர்ந்த 1,12,963 நபர்கள் வாடகை வீடுகளிலும் 10,755 குடும்பங்களைச் சேர்ந்த 34,133 நபர்கள் வாடகை அறைகளிலும் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin