மதுபோதையில் காரைச் செலுத்தி இரு யுவதிகளை மோதிய பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!
மீகொடை பகுதியில் மதுபோதையில் காரைச் செலுத்தி, மோட்டார் சைக்கிளில் சென்ற இரு யுவதிகளை மோதி விபத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஹோமாகம கோட்ட விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தில் காயமடைந்த யுவதிகள் இருவரும் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

