விரைவில் ‘பாகுபலி 3’ உருவாகும்: ராஜமௌலி கொடுத்த சிக்னல்

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாகுபலி.

அதைத் தொடர்ந்து வெளியான பாகுபலி 2 திரைப்படமும் உலக அளவில் ஹிட் அடித்ததோடு, பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களும் சுமார் 2000 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இந்நிலையில் தற்போது பாகுபலி திரைப்படத்தின் 3 ஆம் பாகத்தை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் வைத்து இயக்குநர் ராஜமௌலி இதுகுறித்து கூறியதாவது,“ பாகுபலியை உருவாக்கிய நகரம் ஐதரபாத் எப்பொழுதும் எனது இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பான் இந்தியா தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களில் பாகுபலிக்கு முக்கிய பங்கு உள்ளது. விரைவில் பாகுபலி 3 திரைப்படம் உருவாகும். இது தொடர்பில் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.

இந்த அறிவிப்பைப் பார்த்தால் விரைவில் பாகுபலி 3 திரைப்படத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றமை தெரிய வருகிறது.

Recommended For You

About the Author: admin