அப்பாவுக்கு மரண படுக்கையில் டிடி செய்துகொடுத்த சத்தியம்

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது தந்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விடயங்கள் ரசிகர்களை உருக செய்துள்ளது.

தனியார் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி தற்போது வெள்ளித்திரையிலும் சில படங்களிலும் நடித்து வருகின்றார்.

ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அந்தத் திருமண வாழ்க்கை பாதியிலேயே முடிந்துவிட்டது.

இதனால் தனது வேலையின் மீது தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்தச் சூழலில் தனது தந்தை குறித்து டிடி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

டிடி உருக்கம்

அதில் “எனது தந்தை மரண படுக்கையில் இருந்தபோது அவருக்கு நான் ஒரு சத்தியம் செய்துகொடுத்தேன். அதாவது இறக்கும் தருவாயில் என்னிடம் அவர், ‘இனி இந்தக் குடும்பத்தை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கூரினார்.

அதற்கு நானோ, “நீங்கள் கவலைப்படாதீர்கள் அப்பா. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சத்தியம் செய்துகொடுத்ததாக தெரிவித்தார்.

அந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் இப்போது ட்ரெண்டாகியுள்ளது. டிடியின் தந்தை 19 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin