இரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுமி

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த இரயிலில் இருந்து தவறி விழுந்த பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உறவினர் வீட்டுக்குச் சென்று விடு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

படுகாயமடைந்த சிறுமி வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin