வலி.வடக்கில் 234 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த மக்களின் 234 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டது.

மக்களின் காணிகள் கையளிக்கும் நிகழ்வு அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்றது.

அதற்கமைய ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு , ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த காணிகனே விடுவிக்கப்பட்டன

இந்த காணி விடுவிப்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள் இராணுவத்தினர் மற்றும் காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin