வடக்கு மாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வு புதன்கிழமை

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

சாவகச்சேரி நகர சபை பொன்விழா மண்டபத்தில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ. வாகீசன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ். எம். சமன்பந்துலசேன ஆகியோர் பங்கேற்பர்.

இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் திருமதி கோசலை மதன், சமுதாய மருத்துவநிபுணர் யோசபின் திருமகள் சிவசங்கர் ஆகியோர் சிறப்புரைகளை வழங்குவர். தொடர்ந்து கலைநிகழ்வுகள், பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் கௌரவிப்பு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் நடைபெறவுள்ளன.

Recommended For You

About the Author: admin