இன்றைய ராசிபலன்கள் 02.03.2024

மேஷம்:
வணிகர்களுக்கு இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், இதனால் அவர்கள் மனம் மகிழ்ச்சியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இன்று அலுவலகத்தில் சில கண்டிப்பான நடத்தைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், இல்லையெனில் ஜூனியர் தொந்தரவு செய்ய முயற்சிப்பார்கள்.
பரிகாரம்: வெள்ளை நிற ஆடை அணிந்து லட்சுமி தேவியை வழிபடவும்

ரிஷபம்

நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் எந்த ஒரு வேலையையும் உங்களின் நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் உதவியால் இன்று முடிக்க முடியும். உங்களது திறமை மூலம் பிறரிடத்தில் உங்கள் புகழ் பரவும். இதன் காரணமாக பலர் உங்களுடைய நட்பை பெற முயற்சிப்பார்கள்.
பரிகாரம்: கிருஷ்ண பகவானை வழிபடவும்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் செல்வாக்கு இன்று அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சில முக்கிய வேலைகளை முடிப்பதற்கு பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். குடும்பத்துடன் ஷாப்பிங்கிற்கு வெளியே செல்வீர்கள். கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்பவர்கள் இன்று சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.

பரிகாரம்: அன்னை சரஸ்வதி தேவியை வழிபடவும்

கடகம்:
காலை முதல் உங்களுக்கு நாள் மந்தமாக இருப்பதை போல் சென்றாலும், மதியத்திற்குப் பிறகு நீங்கள் புதிய ஆற்றலை உணருவீர்கள். இது உங்கள் வேலையை விரைவுபடுத்த உதவும். இன்று நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும், இல்லை என்றால் நீங்கள் எதிர்காலத்தில் சிக்கலை சந்திக்க கூடும்.
பரிகாரம்: அரச மரத்தின் கீழ் 5 நெய் தீபம் ஏற்றவும்

சிம்மம்:
இன்று உங்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீங்கள் புதிய சொத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், அதற்கு இன்று ஏற்ற நாளாக இருக்கும். இன்று நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டியிருந்தால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதால் முடிந்த வரை தவிர்த்து கொள்ளுங்கள்.
பரிகாரம்: விஷ்ணு பெருமானை வழிபடவும்

கன்னி;
இன்று நீங்கள் கடன் வாங்க நினைத்தால் எளிதாகக் கிடைக்கும். வியாபார நிமித்தமாக வணிகர்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும். தொழிலதிபர்கள் இன்று லாபம் ஈட்டுவதற்கான சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் அல்லது கடை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்று அதற்கு நல்ல நாள்.
பரிகாரம்: வீட்டின் முக்கிய வாசலில் மஞ்சள் கலந்த நீரை தெளிக்கவும்

துலாம்:
இன்று நீங்கள் எதிர்பார்த்த பணபலன்கள் கிடைக்கும்.வணிகம் அல்லது சொத்துக்கள் தொடர்பான ஏதேனும் எழுத்துப் பணியை நீங்கள் செய்ய விரும்பினால், அதற்கு தேவையான ஆவணங்களை சரிபார்க்கவும். இல்லாவிட்டால் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.
பரிகாரம்: காயத்ரி சாலிசா பாராயணம் செய்யவும்

விருச்சிகம்;
இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் வேலையை கெடுக்க எதிரிகள் தங்களால் இயன்றவரை முயற்சிப்பார்கள். நீங்கள் மிகவும் நம்பிய நபரே உங்களுக்கு துரோகம் செய்யலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
பரிகாரம்: ராம் ரக்ஷா ஸ்தோத்திரத்தை பாடவும்

தனுசு;
இன்று நீங்கள் சில விஷயங்களால் மன அழுத்தத்தை உணரலாம், இதனால் எழும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். ஆனால் பொறுமையை கைவிட்டீர்கள் என்றால் அதனால் ஏற்படும் நஷ்டம் உங்களுக்கு தான். வியாபாரிகளுக்கு நாள் முழுவதும் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதன் காரணமாக பொருளாதார நிலை வலுவடையும்.
பரிகாரம்:பசுமாடுகளுக்கு தீவனம் வழங்குங்கள்

மகரம்:

இன்று நீங்கள் எதிர்பார்க்கும் பண பலன்கள் கிடைக்கும். நீங்கள் செய்யும் எந்தப் வேலையிலும் வெற்றி பெறுவீர்கள். குறிப்பாக மற்றவர்களுடன் இணைந்து செய்யும் பணிகளில் நல்ல பலன்களை பெறுவீர்கள். இன்று வாகனம் ஓட்டும்போது பேச்சைக் கட்டுப்படுத்தி கவனமாக இருங்கள்.
பரிகாரம்: கனக்தாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யவும்

கும்பம்:
இன்றைய நாள் உங்களின் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளை காட்ட கூடியதாக இருக்கும். வியாபாரத்தில் முடியாமல் இழுத்தடிக்கும் டீல்கள் கூட இன்று முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு இருக்கும். சமூகப் பணிகளில் சுறுசுறுப்பாக பங்கேற்பீர்கள், இதற்காக கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள்.
பரிகாரம்: வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யுங்கள்

மீனம்:

வணிகர்கள் தங்களது தொழிலை பொறுத்தவரை, மூத்த உறுப்பினரின் ஆலோசனையைப் பெறலாம், இது சிறந்த பலன்களை அளிக்கும். இன்று, நாள் முழுவதும் உங்களது வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருக்கும், இதன் காரணமாக பொருளாதார நிலையும் வலுவடையும்.
பரிகாரம்: சிவ சாலிசா பாராயணம் செய்யவும்

Recommended For You

About the Author: admin