நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

நெக்டா நிறுவன ஊழியர் மீது முள்ளியவளையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி, இன்று இரண்டு கடற்றொழிலாளர்கள் முள்ளியவளை முறிப்பு குளத்தில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்ததை நெக்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அவதானித்துள்ளார்.

அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டவேளை, நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதனையடுத்து, காயமடைந்த நெக்டா நிறுவன ஊழியர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin