இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் சற்று முன்னர் காலமானார்.

உடல் நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 47 வயதாகும்.

இதேவேளை, இசைஞானி இளையராஜாவின் விசேட இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விபரங்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை

Recommended For You

About the Author: admin