20 இலட்சம் ரூபா கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

இலந்தடிய பிரதேசத்தில்  (25.01.2024) காரில் கேரள கஞ்சாவை கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள குத்தகை நிறுவனமொன்றில் கடன் வழங்கும் அதிகாரியாக பணியாற்றியவர் என நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்

ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் காரின் சாரதி ஆசனத்திலும் மற்றைய முன் இருக்கைகளிலும் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டது.

அவரது காரில் இருந்து சுமார் 20 இலட்சம் ரூபா மதிப்பிலான 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Recommended For You

About the Author: admin