சீனா தீ விபத்தில் 39 பேர் பலி

சீனாவின் மத்திய மாகாணமான ஜியாங்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று (24) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜின்யூ நகரில் உள்ள கட்டிட வளாகத்தில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சீனாவின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜீ.எம்.டி நேரப்படி நேற்று 07.24 அளவில் ஜியாங்சி ஜின்யூ நகரில் உள்ள வணிக வளாகத்தில் தரை மட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

CCTV மூலம் வெளியிடப்பட்ட காணொளி காட்சிகள் பல தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஏனைய அவசரகால மீட்பு வாகனங்கள் வணிக வளாகத்திற்கு அருகில் வரிசையாக நிற்பதை காணமுடிகிறது.

Recommended For You

About the Author: admin