பிக்பாஸ் வீட்டில் பைனலுக்கு சென்ற முதல் போட்டியாளர்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி மேடைக்கு முதல் நபராக விஷ்ணு சென்றுள்ளார்.

பிக் பாஸ்

பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 84 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம் என 14 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது 84 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரவீனா, மணி சந்திரா, மாயா, தினேஷ், நிக்ஷன், விஷ்ணு என 6 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இன்று கோல்டன் டிக்கெட்டிற்கான கடைசி போட்டி நடைபெற்றது, அதில் வீட்டின் கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள போர்டில் டிக்கெட் டூ பினாலே என்கிற பதாகையை போட்டியாளர்கள் கீழே விழாமல் ஒற்றைக்கையால் பிடித்துக்கொள்ள வேண்டும்.

யார் அதிக நேரம் கையை எடுக்காமல் பதாகையை பிடித்திருக்கிறார்களோ அவரே இந்த டாஸ்க்கில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். மேலும் இந்த டாஸ்க்கில் வெற்றிபெறுபவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து தொடங்கிய போட்டியில் நிக்சன் முதல் ஆளாக வெளியேறியதால் அவர் டிக்கெட் டூ பினாலே செல்லும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து நீண்ட நேரம் தாக்குப்பிடித்து இந்த போட்டியில் ரவீனா வெற்றிபெற்று உள்ளார். அவருக்கு ஐந்துபுள்ளிகள் கிடைத்தாலும் அவருக்கு டிக்கெட் டூ பினாலே டிக்கெட் கிடைக்கவில்லை.

இந்த போட்டியில் மூன்றாம் இடம்பிடித்த விஷ்ணு தான் மற்ற டாஸ்க்குகளின் முடிவில் அடிப்படையில் வெற்றிபெற்று டிக்கெட் டூ பினாலே வின்னராக அறிவிக்கப்பட்டு முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்துள்ளார்.

இதுவரை டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்ற யாரும் டைட்டில் ஜெயித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor