விமானத்தில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: உடன் பயணித்த இந்திய பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணித்த இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அதே விமானத்தில் பயணித்த இந்திய பிரஜை விமானத்தின் பணியாளர்கள் பிடித்து, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்று காலை 7.20 அளவில் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 49 வயதான இந்தியர் தச்சு தொழில் நிபுணர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் ஸ்ரீலங்கன் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து வேறு விமானத்தில் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லவிருந்தார்.

சவுதியில் தொழில் புரியும் தனது தந்தையை பார்க்க சென்று விட்டு, நாடு திரும்பிக்கொண்டிருந்த அவிசாவளை கெட்டஹெத்த பிரதேசத்தை சேர்ந்த தாயும் இரண்டு மகள்களும் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

அப்போது அவர்களில் 9 வயதான சிறுமியை சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் இரைகது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை மருத்துவப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பரிசோதனைகளின் பின்னர் இந்திய பிரஜை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin