இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை பிரதமர் மோடி

இந்திய இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.  

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விளையாட்டு திருவிழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு மத்தியில் காணொலி வழியாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பொருளாதார காரணங்களால் இளைஞர்கள் பின்தங்கி விடக்கூடாது என்பதில் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெற்று வருவது, நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் எதிரொலி என்றும் மோடி குறிப்பிட்டார். 2014 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு 3 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள அவர் குறிப்பிட்டார். இந்திய இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்றும் போதுமான ஊக்கம் அளிக்கப்படும்போது இலக்கு எளிதாகிவிடுவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

 

Recommended For You

About the Author: admin