பொலிஸார் மீது குற்றம் சுமத்தும் டிரான்

பொலிஸ் அதிகாரிகள் சிலர் சரியாக செயற்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்க முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (18) இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலே அமைச்சர் இந்த... Read more »

நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்க முயற்சி

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராம மட்டத்தில் நாமல் ராஜபக்சவுக்கு இருக்கும் ஆதரவு மற்றும் விருப்பம்... Read more »
Ad Widget

போராட்டத்தில் கல்விசாரா ஊழியர்கள்: பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். விரிவுரையாளர்களின் கொடுப்பனவை மாத்திரம் அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இன்று (ஜன.18) காலை முதல்... Read more »

போலி நாணயத்தாள்கள் மீட்பு: ஒருவர் கைது

பல போலி நாணயத்தாள்களுடன் வேன் சாரதி ஒருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் மெதமுலன பகுதியில் இருந்து சிவனெளிபாத மலைக்கு யாத்ரீகர்கள்... Read more »

வெளிநாட்டு ஆசைகாட்டிய அழகு கலை நிபுணர்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தன்னை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை... Read more »

பெண் ஊழியர்களை தாக்கிய மருத்துவர் கைது

இரண்டு கனிஷ்ட பெண் ஊழியர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றும் சிறப்பு மருத்துவ நிபுணரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கராப்பிட்டிய வைத்தியசாலையில் புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெறும் விடுதிக்கு பொறுப்பான மருத்துவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் பொலிஸ்... Read more »

ஹூதிகளின் தாக்குதலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நன்மை

ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்ததில் இருந்து கொழும்பு துறைமுகம் உலகளாவிய கடல் போக்குவரத்து மையமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது. துறைமுகத்தின் மூன்று முனையங்களிலும் அதிகளவான கப்பல்கள் தரித்துச் செல்லும் பாதைகளை கோரியுள்ளன. மேலும் இந்தியாவில்... Read more »

20 மாதங்களாக சிகிச்சைப் பெறும் துமிந்த சில்வா

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கொழும்பு ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்ந சிலையில் சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் சிபாரிசுகளின் அடிப்படையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் துமிந்த சில்வா, கடந்த 20 மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை... Read more »

வலையில் சிக்கிய சிறுத்தை உயிருடன் மீட்பு

மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் இல்லத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அடையாளம் தெரியாதோர் இட்ட வலையில் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இதை அவதானித்த தோட்ட முகாமையாளர் இல்ல தோட்டத் தொழிலாளி உடனடியாக நிர்வாக அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து நிர்வாக அதிகாரி நல்லதண்ணி பிராந்திய... Read more »

கொழும்பு மாநரக சபையுடன் முரண்படும் பொதுமக்கள்

ஹோர்டன் பிளேஸ் வீதியை “பொன்னம்பலம் அருணாசலம் மாவத்தை” என மறுபெயரிடும் கொழும்பு மாநகர சபையின் பிரேரணைக்கு எதிராக ஹோர்டன் பிளேஸ் குடியிருப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பின் முன்னாள் மேயர் ஒமர் கமிலால் குறித்த முன்மொழிவு... Read more »