தமிழ் மக்களின் நீடித்த அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை காணும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் ஆதரவுகளும் குறைவடைந்து செல்வதாக மக்கள் வேதனை வெளியிட்டுள்ளனர். தென்னிலங்கை ஆட்சியாளர்கள், ஒற்றை ஆட்சி அரசியலமைப்பினை தூக்கிப்பிடித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்ற போலியான விம்பத்தை காண்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.... Read more »
ஜே.வி.பி. ஆட்சிக்கு வந்தால் நாடு பிளவுபடும் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போது அவர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், நாட்டை பிளவுபடுத்தும்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைக்கு அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக்கட்டிடத்தில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சிலருடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் ஆளுங்கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டவுடன் இந்த... Read more »
தேயிலை ஏற்றுமதி மூலமாக ஈரானின் $20 மில்லியன் எண்ணெய் கடனை இலங்கை செலுத்தியுள்ளது ஈரானுக்கான 251 மில்லியன் டொலர் எண்ணெய்க் கடனை ஓரளவு திருப்பிச் செலுத்துவதற்காக 20 மில்லியன் டொலர் பெறுமதியிலான தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை இன்று (21) தெரிவித்துள்ளது. இலங்கைக்கு... Read more »
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் சக்தி பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது என கோரி, வினிவிந்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதி மன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 04 ஆம்... Read more »
தென்னிலங்கை ஆட்சியாளர்களினால் தமிழனத்தை அழிப்பதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் உலகெங்கும் தமிழ்மொழி பரந்துவிரிந்து வளர்ந்து வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பான விவாத்தில் உரையாற்றும் போதே... Read more »
2024-25 இற்கு இடைப்பட்ட நிதியாண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (Economic and Technology Cooperation Agreement – ETCA) கையெழுத்திட இலங்கை தீர்மானித்துள்ளது. ஒப்பந்தம் தொடர்பில் இந்தியாவின் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இந்திய... Read more »
இலங்கைக்கான அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளுமாறு ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரையீசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் இந்த தவகலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி இப்ராஹீம் ரையீசி தலைநகர் கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளும் அழைப்பு தமக்கு... Read more »
அரச பாடசாலைகளில் கடந்த மாதம் முதல் நீர் கட்டணம் அறவிடப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலைகளில் இதுவரை குடிநீருக்கான கட்டணம் அறவிடப்படாமலேயே மாணவர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மாதாந்தம் 20 நாட்களுக்கு மாத்திரம்... Read more »
நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய மத்திய வங்கியின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மோசடி என சுதந்திர மக்கள் காங்கிரசின் செயற்குழு உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்தார். பொது மக்கள், சம்பளத்தை உயர்த்துமாறு போராட்டங்களை நடத்தியும் அதற்காக பணம் இல்லை என அரசாங்கம் மறுத்துவிட்டதாக அவர்... Read more »

