கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

அடுத்த ஆண்டு முதல் வருடாந்தம் ஐந்து லட்சம் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்க கனடா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் மற்றும் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் ஆகியோர் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கொவிட் பெருந்தொற்றுக்கு... Read more »

‘அவை ஏலியன் அல்ல பொம்மைகள்’

பெரு நாட்டின் லிமா நகரில் உள்ள விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஏலியன்கள் என கூறப்பட்ட ஒரு ஜோடி உடல்கள் வேற்றுகிரகவாசிகள் இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானப் பகுப்பாய்வின் பிரகாரம் இது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »
Ad Widget

தைவான் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி: சீனாவுக்கு கடும் அதிர்ச்சி

உலக நாடுகளின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற தைய்வான் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் லாய் சிங்-தே வெற்றி பெற்றுள்ளார். லாய் சிங்-தேவின் தேர்தல் வெற்றி, சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தைவானின் ஆளும் ஜனநாயக... Read more »

போயிங் 737 ‘மேக்ஸ்’ 9 ரக விமானங்கள் பறப்பதற்குத் தடை

அமெரிக்காவின் மத்திய விமானத்துறை நிர்வாகம் போயிங் 737 ‘மேக்ஸ் 9’ ரக விமானங்கள் பறப்பதற்கு விதித்துள்ள தடையை நீட்டித்துள்ளது. விமானக் கதவு ஒன்று நடுவானில் பெயர்ந்து விழுந்ததைத் தொடர்ந்து போயிங் மீதான கண்காணிப்பை அதிகரிக்கப்போவதாக அது அறிவித்தது. ஜனவரி 16ஆம் திகதிவரை யுனைடெட் ஏர்லைன்சும்... Read more »

ரிஷி சுனக் உக்ரைனுக்கு திடீர் பயணம்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடவும், ஆளில்லா வானூர்திகளை வாங்க உக்ரேனுக்கு இராணுவ நிதியுதவியை அதிகரிக்கவும் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார். நேற்று மாலை அவர் இந்த விஜயத்தை திடீரென மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன. முன்... Read more »

ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி, பலர் காயம்

நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் உள்ள ரப்தி ஆற்றில் பயணிகள் பஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு இந்தியர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை (12) இரவு சுமார் 11:30... Read more »

பிரேசில் தீவில் இரண்டு இராட்சத ‘ஏலியன்கள்’

பிரேசிலில் 10 அடி உயரமுள்ள இரண்டு வேற்றுகிரகவாசிகளை கண்டதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பயணி ஒருவரால் பிடிக்கப்பட்ட காணொளியில் மலைப்பாங்கான இடத்தில் இரண்டு உருவங்கள் வழக்கத்திற்கு மாறான வேகத்தில் செல்வதை காட்டுகின்றது. மலையேறுபவரான சாரா டேலேட் தனது குடும்பத்துடன் பிரேசில் தீவில்... Read more »

சீனா சுரங்க விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல்போயுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று இடம்பெற்ற இந்த விபத்து நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் காரணமாக நிகழ்ந்ததாகவும், விபத்து... Read more »

ஏலத்திற்கு வரும் 180ஆண்டு பழமையான உலகின் முதல் தபால் முத்திரை

உலகிலேயே முதன் முதலில் வெளியிடப்பட்டதாகநம்பப்படும் 180 ஆண்டுகள் பழமையான தபால் முத்திரை ஏலத்திற்கு வந்துள்ளது. ஒரு சதம் விலையான கொண்ட இந்த தபால் முத்திரை 25 லட்சம் டொலர் ஏலத்தில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 2, 1850 திகதியிட்ட இந்த கருப்பு... Read more »

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 36 குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடுங்குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. கடுங்குளிர்... Read more »