ஜெர்மனியின் இரயில் செலுத்துனர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் ஒன்று பாரியளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வேலை நேரம் மற்றும் ஊதியம் தொடர்பில் நீண்டகாலமாக காணப்படும் முரண்பாடு காரணமாக இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மன் நேரப்படி அதிகாலை 2 மணி முதல்... Read more »
ஏமனை தலைமையிடமாக கொண்ட அல்-கைய்தா அமைப்பின் அரேபிய தீபகற்பத்தின் தலைவரான காலித் அல்-பதர்ஃபி (Khalid Al Batarfi) மரணமடைந்துள்ளார். இந்தத் தகவலை அல்-கைய்தா அமைப்பினர் நேற்றிரவு (10) அறிவித்துள்ளனர். அரேபிய தீபகற்பத்தின் அல்-கைய்தா குழுவின் தலைவரான காலித் அல்-பதர்ஃபி,அமெரிக்காவினால் தேடப்பட்டு வந்தவர் என்பதுடன் அவரை... Read more »
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக LATAM ஏர்லைன்ஸ் நடுவானில் ‘வலுவான இயக்கத்தை உருவாக்கியதால்’ விமானத்தில் பயணித்த குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திங்களன்று (11) அவுஸ்திரேலியாவின் சிட்டினியில் இருந்து நியூஸிலாந்தின் ஆக்லாந்து நோக்கி பயணித்த போயிங் 787-9 ரக விமானமே... Read more »
போர்த்துக்கல் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மத்திய வலதுசாரி கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தலில் இந்த வெற்றி பதிவாகியுள்ளது. இதனை மத்திய வலதுசாரி கூட்டணியின் தலைவர் லூஸ் மோன்டென்கிரோ(Luis Montenegro) உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை தீவிர வலதுசாரி கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாது எனவும்,... Read more »
உக்ரெய்னுடன் சமாதான பேச்சுக்களில் ஈடுபடுமாறு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் விடுத்த கோரிக்கையினை ரஷ்யா நிராகரித்துள்ளது. மேலும் உக்ரெய்னின் ஜனாதிபதி செலன்ஸ்கியிடம் தாம் சரணாகதி அடையமாட்டோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மோதலில் ஈடுபடும் தரப்புக்களில் ஒருதரப்பு மிகவும் மோசமான பாதிப்பை அடையும் போது... Read more »
நீர் பற்றாக்குறை காரணமாக பிரான்ஸின் தெற்குப்பகுதியில் நிர்மாணப் பணிகளுக்கு அனுமதி வழங்குவது இடைநிறுத்தபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் வார் பிரிவில் உள்ள 9 கம்யூன்களை உள்ளடக்கிய அதிகாரசபையினால் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து புதிய கட்டுமானங்களுக்குமான... Read more »
உலகில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மற்றும் பாரிய நிலப்பரப்பை கொண்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. மிகவும் செல்வந்த நாடாக உள்ள கனடாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். புலம்பெயர்ந்து செல்லும் மக்களையும் கனடா அரவணைத்துக் கொள்கிறது. இவ்வாறான பின்புலத்தை கொண்ட நாட்டில் வாழும் மக்களுக்கு... Read more »
பசுபிக் பிராந்தியத்தில் மீன்பிடிச் சட்டத்தை சீன மீன்பிடி படகுகள் மீறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை உள்ளூர் பொலிஸார் கண்டடிறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடலில் பிடிக்கப்படும் மீன்கள் தொடர்பான தகவல்களை ஒழுங்காக பதிவு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. இதேவேளை சீன மீனவர்கள் பொருளாதார மத்திய பகுதியில் ஏனைய... Read more »
உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்குவது சம்பந்தமாக ஜேர்மன் இராணுவ உயர் அதிகாரிகள் இடையில் நடந்த உரையாடல் அடங்கிய குரல் பதிவை ரஷ்ய ஊடகங்கள் பகிரங்கப்படுத்தியதை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படும் உருவாகியுள்ளது. இந்த சம்பவம்... Read more »
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு காசா பகுதியில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் மூன்றாம் கட்டபேச்சுவார்த்தைக்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் தரப்பு தங்கியுள்ளது. இதேவேளை இஸ்ரேலின் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது. பேச்சுவாரை்த்தைகளின் பிரகாரம் நாற்பது நாட்களுக்கு எதிர்பார்க்கப்படும் யுத்த நிறுத்த காலப்பகுதியில்,... Read more »

