108ஆவது பொன் அணிகள் போர்…!

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 27,28, மற்றும் 01 ஆகிய மூன்று தினங்களில் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக... Read more »

வடக்கிலிருந்து மாடுகடத்தும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

மாடுகள் கடத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்ட பாரவூர்தியில் 18 மாடுகள் யாழ்ப்பாணத்திருந்து வவுனியாவிற்கு கடத்திக்கொண்டு சென்ற போது சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குள் சாவகச்சேரி பொலிஸார் பாரவூர்தியை கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். பாரவூர்தியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பசுக்கள் கன்றுகள் அடங்கலாக 18 மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

ஜனாதிபதி அனுரவின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி…!

உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது. இது உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்ளவதை குறிக்கிறது. எனவே,மாயை இருள்... Read more »

வடகிழக்கில் உள்ள 92 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களை பாதீடு கவனத்திலெடுக்கவில்லை- கே.எஸ். குகதாசன்

வடக்கு மற்றும் கிழக்கில் 92,000 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் நிலையான வருமான வழிமுறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் விசேடத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. பெண்தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு... Read more »

இலங்கையின் முன்னைய வெளிவிவகார அமைச்சர்கள் சொன்னதையே மீண்டும் வலியுறுத்தினார்-; விஜித ஹேர

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆரம்ப உரையை நிறைவு செய்துள்ளார் தேசிய மனித உரிமைகள் கட்டமைப்புகள் மூலம் அரசுகள் தங்கள் சவால்களை எதிர்கொள்ள ஊக்குவிக்கப்பட்டு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என... Read more »

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

கச்சத்தீவு பெருவிழா கடற்படையினருக்கு 32 மில்லியன் நிதி..!

கச்சத்தீவு திருவிழா ஒழுங்கமைப்பு பணிகளுக்கான செலவீனமாக 3 கோடியே 20 இலட்ச ரூபாய் நிதி கடற்படையினருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. கச்ச தீவு பெருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் உள்ளிட்ட 09 ஆயிரம் பேர்... Read more »

யாழில். காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு 30 ஆயிரம் தண்டம்..!

காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் அண்மையில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அதன் போது வர்த்தக நிலையம் ஒன்றில் காலாவதியான... Read more »

திருந்துங்கள் இல்லை அடக்கப்படுவீர்கள்; பாதாள உலக குழுவினருக்கு பிமல் பகிரங்க எச்சரிக்கை..!

இலங்கையில் பாதாள உலக குழுக்கள் நடத்தும் கொலைகளை நிறுத்துமாறும் தொடர்ந்து கொலைகளைச் செய்தால், அவர்களை அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர், நாடாளுமன்ற சபை தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில், அரசியல்... Read more »

யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம்…!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்,... Read more »