தமிழரசுக் கட்சியின் தலைமை பதவிக்கு கடும் போட்டி: இணக்கப்பாட்டுக்கு மறுப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு... Read more »

துணை முதலமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு

தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், இது ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தி.மு.க.வின் இளைஞரணி மாநாடு சேலத்தில் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு... Read more »
Ad Widget

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வெளியானது: இலங்கைக்கு எத்தனையாவது இடம்?

2024ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் புதிய தரவரிசை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு நாடுகள் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. “ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்“ நாடுகளின் பயண ஆவணங்களை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசையை வெளியிட்டு வருகிறது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து முதலிடத்தில் ஜப்பான் இருந்துவந்த... Read more »

இளவரசியின் வருகையால் யாழ். பொது நூலகத்திற்கு பூட்டு

பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்.வருகையால் இன்றைய தினம் வியாக்கிழமை யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது. யாழ்.பொது நூலக பிரதான வாயிலில் “விசேட காரணத்தினால் காலை 10.30 மணிக்கு... Read more »

ஆசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் நாளை ஆரம்பம்

ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பின் ஆசியக் கிண்ணப் போட்டிகள் கத்தாரில் நாளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) தொடங்கவுள்ளன. இலங்கை நேரப்படி நள்ளிரவு 9.30 மணிக்குத் தொடங்கும் முதல் ஆட்டத்தில் தென்கொரியாவும் லெபனானும் மோதவுள்ளன. 13ஆம் திகதி இடம்பெறும் ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது. மொத்தம் 24... Read more »

இன்றைய வானிலை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில்காற்றானது வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »

தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் ஏழு பேரும் எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை சர்ச்சைக்குரிய வகையில்... Read more »

உறைபனிக்கு மத்தியில் போராட தயாராகும் மக்கள்

பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் ‘ஹீட்டர்’ எனப்படும் வெப்பத்தை உருவாக்கும் சாதனத்தை ஜனவரியில் பயன்படுத்த விருப்பமில்லாமல் இருக்கின்றனர். ஏனெனில் அந்நாட்டில் நிலவும் உறைபனி வெப்பநிலையை விட ஹீட்டரைப் பயன்படுத்தும்போது வரும் எரிசக்தி கட்டணம் அதிகமாக இருப்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட 65... Read more »

சீனாவின் மக்கள் தொகை மீண்டும் குறைந்தது

கொவிட்-19 தொடர்பான இறப்புகளின் அதிகரிப்பு காரணமாக சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2023 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இரண்டு... Read more »

துரித உணவு கலாச்சாரம்: மக்களுக்கு வைத்திய பரிசோதனை அவசியம்

அதிகரிக்கும் துரித உணவு கலாசாரத்தின் காரணமாக நாட்டில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் நேற்று நடத்தப்பட்ட தொற்றாத நோய்கள் குறித்த சந்திப்பு ஒன்றிலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன.... Read more »