ஒப்பந்த கொலைகளைச் செய்கின்றனரா இலங்கை இராணுவத்தினர்?

பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்புடைய குற்றச் செயல்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பலர் செயற்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தி ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் சமீபகாலமாக நடந்த பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. குறித்த... Read more »

ரணிலின் சதி : உடைக்கிறதா சஜித் கூட்டணி?

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியை சீர்குலைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் என சுதந்திர மக்கள் சபையின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார். “ ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நான்தான் நிதி அமைச்சர், பொருளாதார அமைச்சர்... Read more »
Ad Widget

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் உள்ளக மோதல்: பத்திரிகை ஆசிரியர் நீக்கம்

அரசாங்கத்தின் ஊடக நிறுவனமான லேக்ஹவுஸ் நிறுவனத்தில் உள்ளக மோதல் காரணமாக நிறுவனத்தின் சிங்கள வார இதழ் பிரதம ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிலுமின பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றிய தர்மன் விக்கிரமரத்னவே அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். லேக்ஹவுஸில் ஏற்பட்டுள்ள பாரிய உள்ளக மோதல் நிலையின்... Read more »

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் இலங்கையின் உள்விவகாரம்: ரஷ்யா

இலங்கை பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதுவர் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மையில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டம் குறித்து அமெரிக்கா,... Read more »

கட்சித்தாவல் விரைவில் அமைச்சரவை மாற்றம்

எதிர்வரும் வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றமொன்று நிகழ்வதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 07ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கிடையே அமைச்சரவையில் மாற்றம் ஒன்றை மேற்கொள்ளவும், புதியவர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவும் ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக... Read more »

பரந்துபட்ட அரசியல் கூட்டணி: சம்பிக்க தெரிவிப்பு

எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்கி தனது வேலைத்திட்டத்துடன் பொதுமக்களிடம் செல்லவுள்ளதாக சம்பிக்க ரணவக்க எம்.பி. தெரிவித்துள்ளார். பெந்தர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க... Read more »

ஜனாதிபதி, பிரதமர் : குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களை பெற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (150,000) அளவிலான அரச சேவையில் உள்ள உயர் அதிகாரிகள், ஊடக... Read more »

எஃப்ஏ கிண்ணம்: கடைசி நேரத்தில் கனவைக் கலைத்த மேன்சிட்டி

ஆட்டம் முடியும் தறுவாயில் நேதன் அக்கே அடித்த ஒற்றை கோலால் எஃப்ஏ கிண்ணக் கால்பந்தின் நான்காம் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு 1-0 என்ற கணக்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவைத் தோற்கடித்தது. ஸ்பர்ஸ் குழுவின் புதிய அரங்கில் சிட்டி குழுவிற்குக் கிடைத்த முதல்... Read more »

மட்டக்களப்பில் கறுப்புப்பட்டி போராட்டம்.

மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுப்புப் பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு ஜனவரியை அனுஸ்டிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஊடக அமைப்புகள் இன்றைய தினம் (27) போராட்டங்களையும், அனுஸ்டிப்பு நிகழ்வுகளையும்... Read more »

பொய்யான செய்திகளை வெளியிடுவோரை சிறப்புரிமை குழுவுக்கு அழைக்க முடியுமா?

கட்சியின் நடவடிக்கைகள் சம்பந்தமாக பொய்யான செய்திகளை வெளியிடும் நபர்களை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்க முடியுமா என்பதை அறிந்துக்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கட்நத காலங்களில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள்... Read more »