மட்டக்களப்பில் கறுப்புப்பட்டி போராட்டம்.

மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுப்புப் பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கறுப்பு ஜனவரியை அனுஸ்டிக்கும் முகமாக நாடளாவிய ரீதியில் ஊடக அமைப்புகள் இன்றைய தினம் (27) போராட்டங்களையும், அனுஸ்டிப்பு நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பிலும் ஊடக அமைப்புகளின் ஏற்பாட்டில் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin