அமெரிக்காவில் இரண்டு பிரம்மாண்டமான வெப்பக் கூடாரங்கள் ஒன்றிணையவிருப்பதாகவும், இது வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெப்பத்தை உருவாக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பாலைவனப் பகுதியில் உருவான ஒரு வெப்ப மண்டலமும், துணை வெப்பமண்டல அட்லாண்டிக் பகுதியில் உருவான மற்றொரு வெப்ப மண்டலமும் இப்போது ஒன்றிணைந்து வருகின்றன.
இந்த இரண்டும் இணைந்து மிசிசிப்பி மற்றும் ஓஹியோ பள்ளத்தாக்கு பகுதிகளில் ஒரு மிகப்பெரிய ‘வெப்பக் கூடாரத்தை’ உருவாக்குகின்றன.
4ஆம் திகதி விடுமுறை வார இறுதியில், 150 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடும் வெப்ப அலை அபாயத்தை எதிர்கொள்ளவுள்ளனர்.
வெப்பத்தின் அளவு 110 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் (சுமார் 43°C-க்கும்) அதிகமாகச் செல்ல வாய்ப்புள்ளது. இது பகல் மற்றும் இரவு என இரு நேரங்களிலும் மிகவும் ஆபத்தானது.
அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, வியர்வை ஆவியாகாமல் தடுத்து, சூரியன் மறைந்த பிறகும் உடல் தன்னைத்தானே குளிர்வித்துக்கொள்ள போராடும் நிலையை உருவாக்குகிறது.
சிகாகோ, பிலடெல்பியா மற்றும் நியூயார்க் போன்ற நகரங்கள் 2026-ன் முதல் பெரிய வெப்ப அலையைச் சந்திக்கத் தயாராகி வருகின்றன.
அமெரிக்காவில் மற்ற எந்த இயற்கை பேரிடர்களை விடவும், அதிக உயிர்களைப் பலிவாங்குவது இந்த அதீத வெப்பம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

