பெண்களுக்குப் போதை மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை: 8 பேர் அதிரடிக் கைது!

பெண்களுக்குப் போதை மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை: பிரித்தானியாவில் 8 பேர் அதிரடிக் கைது!

தங்களுக்கு நெருக்கமான பெண்களுக்குப் போதை மருந்து கொடுத்து, அவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஒரு மாபெரும் சர்வதேசக் குற்றவியல் வலையமைப்பைச் சேர்ந்த எட்டுப் பேர் பிரித்தானியாவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை அந்த நாட்டின் தேசியக் குற்றத் தடுப்பு முகமையான NCA நேற்று வியாழக்கிழமையன்று வெளியிட்டுள்ளது.

 

இணையத்தளம் ஒன்றின் மூலமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்த இந்தச் சர்வதேசக் கும்பலை, கடந்த 2025-ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டுப் பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட ஒரு இரகசிய விசாரணையே வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.

 

அந்தத் தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணையில் இறங்கிய NCA அதிகாரிகள், அனைத்துக் கண்டங்களிலும் உள்ள பல நாடுகளில் இந்த வலையமைப்பின் உறுப்பினர்கள் பரவியிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாகத் தற்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமாக 14 தனித்தனி விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உலக அளவில் இதுவரை 270 சந்தேக நபர்கள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

பிரான்சில் தனது சொந்த மனைவிக்கே பத்தாண்டுகளாகப் போதை மருந்து கொடுத்து, அவரைப் பலரை வைத்துப் பாலியல் வன்கொடுமை

 

செய்த Dominique Pelicot வழக்கு கடந்த 2025-ஆம் ஆண்டில் ஐரோப்பா முழுவதும் மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

 

அந்த Pelicot வழக்கை நினைவூட்டும் வகையிலேயே தற்போது இந்தச் சர்வதேச வலையமைப்பும் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 

இந்த வழக்குப் குறித்துப் பேசிய NCA அமைப்பின் துணை இயக்குநர் Nigel Leary, “போதை மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்வது என்பது இனிமேலும் ஆங்காங்கே நடக்கும் தனித்தனிச் சம்பவங்கள் அல்ல;

 

இவை மிகவும் திட்டமிட்டு ஒருங்கமைக்கப்பட்ட வலையமைப்பாகச் செயல்படுகின்றன.

 

இதுவரை நாங்கள் கண்டறிந்துள்ள இதன் பரிமாணம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin