நாவலப்பிட்டி நகரம் மழை வெள்ளத்தில்.!!
இன்று மதியம் நாவலபிட்டிய பகுதியில் பெய்த கனமழையால் நாவலப்பிட்டி நகரில் மழை நீர் புகுந்தது உள்ளது.
இதன் காரணமாக நாவலப்பிட்டி நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் 18 இஞ்சி உயரம் வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
மேலும் கண்டி கம்பளை வீதியிலும் மழை நீர் புகுந்தது உள்ளது இதன் காரணமாக பாதசாரிகள் மற்றும் பயணிகள் பாரிய அளவில் அசௌகரியத்தை எதிர் நோக்கினர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
நகரில் உள்ள அனைத்து வடிகால்களும் ஆலப் படுத்தி முறையாக அந்த கழிவு நீர் செல்லும் வடிகால்களை மகாவலி கங்கையில் சங்கமிக்க வழி செய்ய நாவலப்பிட்டி நகர சபை மற்றும் மத்திய மாகாண ஆளுநர் இன்றைய அரசாங்கம் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.


