தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து..!
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று (17.04.2026) இரத்துச் செய்யப்பட்டது.
தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால் இன்று அளவீடு செய்யப்படுவதாக காணி உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர் ஆனால் இறுதியில் காணி அளவீடு செய்யப்படவில்லை.
காணி அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களம் ஊடாக நீதி அமைச்சர், புத்தசாசன அமைச்சர், மற்றும் கடல் தொழில் அமைச்சர் அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் கடந்த சில தினங்களில் தீர்மானித்திருந்தனர்.
இன்றைய தினம் உரிமையாளர்களும் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அங்கு வந்த யாழ். மாவட்ட நில அளவைத் திணைக்களத்தினர் மற்றும் அரசாங்க அதிபர் மா.பிரதிபன் உள்ளிட்டோர் இன்னும் இரண்டு வாரங்கள் தவணை தேவைப்படும் என்றும் அதன் பின்னரே அழைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

