இருபாலை கற்பக விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி உற்சவம்

( யாழ். நிருபர் ரமணன் )

யாழ்ப்பாணம் இருபாலை கற்பக விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி விரத உற்சவம் இன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

கருவரையில் வீற்றிருக்கும் கற்பக விநாயகருக்கு விஷேட அபிஷேகங்கள் – சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்திலிருந்து தாமரைத்தண்டில் வீற்று எம் பெருமான் வெளிவீதியூடாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

ஆலய பிரதமகுரு க.கற்பகராஜாக்குருக்கள், இவ் உற்சவத்தை நடத்தினார்.

இதில் இருபாலை கற்பக விநாயகரின் மெய்யடியார்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.

Recommended For You

About the Author: webeditor