ஈரானுக்கு எதிரான போர் செப்டம்பர் வரை நீடிக்க வாய்ப்பு? – பென்டகனிடம் கூடுதல் அதிகாரிகள் கோரிக்கை!

ஈரானுக்கு எதிரான போர் செப்டம்பர் வரை நீடிக்க வாய்ப்பு? – பென்டகனிடம் கூடுதல் அதிகாரிகள் கோரிக்கை!

அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் (CENTCOM), ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக கூடுதல் புலனாய்வு அதிகாரிகளைத் தனது தலைமையகத்திற்கு அனுப்புமாறு பென்டகனிடம் (அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகம்) கோரிக்கை விடுத்துள்ளது.

புளோரிடாவில் உள்ள சென்காம் தலைமையகத்திற்கு கூடுதல் இராணுவ புலனாய்வு அதிகாரிகளை அனுப்ப கோரப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் குறைந்தபட்சம் 100 நாட்கள் அல்லது வரும் பெப்ரவரி மாதத்திற்குப் பிறகான செப்டம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக ‘பொலிடிகோ’ (Politico) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி முதலில் கணித்த நான்கு வார காலக்கெடுவைத் தாண்டி இந்தப் போர் நீண்டகாலம் தொடரக்கூடும் என்பதையே இந்த நகர்வு காட்டுகிறது.

இதற்கிடையில், ஈரானின் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அமெரிக்கா அப்பகுதிக்கு அனுப்பி வருகிறது.

2026 மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வெளியான தகவல்களின்படி, சென்காம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. போருக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வளங்களை பென்டகன் ஏற்கனவே தயார் செய்து வருவதாகத் தெரிகிறது.

Recommended For You

About the Author: admin