” பைத்தியக்காரர்களின் கைகளில் அணுவாயுதமா?”

” பைத்தியக்காரர்களின் கைகளில் அணுவாயுதமா?” – ஈரானைக் கடுமையாகச் சாடிய டொனால்ட் டிரம்ப்!

 

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் முற்றுமுழுதான வெற்றியடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெருமிதம் வெளியிட்டுள்ளார். ஈரானின் அணுவாயுதத் தளங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அங்கு தலைவராக வர நினைக்கும் அனைவரும் இறுதியில் மரணத்தையே தழுவுவதாகவும் கடுமையாகக் கேலி செய்துள்ளார்.

 

தனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், ஈரானுடனான போர் நிலைமை, வெனிசுலாவுடனான புதிய இராஜதந்திர உறவு மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரம் குறித்துப் பல அதிரடியான தகவல்களை வெளியிட்டார்.

 

அணுவாயுதக் கனவு தரைமட்டம்

அமெரிக்காவின் ‘B-2’ குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் அணுவாயுதத் தளங்களை முழுமையாக அழித்துள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் உறுதிப்படுத்தினார். “நாங்கள் இந்தத் தாக்குதலை முன்கூட்டியே நடத்தத் தவறியிருந்தால், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஈரான் ஒரு அணுவாயுதத்தை உருவாக்கியிருக்கும். பைத்தியக்காரர்களின் கைகளில் அணுவாயுதம் கிடைத்தால் உலகிற்கு என்ன நேரிடும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்” என அவர் உலக நாடுகளை எச்சரித்தார்.

 

முந்தைய ஒபாமா நிர்வாகம் மேற்கொண்ட தவறான அணுவாயுத ஒப்பந்தமே, ஈரான் இத்தகைய ஆபத்தான நிலையை அடைவதற்குக் காரணம் எனவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

 

ஈரானின் தலைமைத்துவ நெருக்கடி

ஈரானின் தற்போதைய அரசியல் மற்றும் இராணுவ நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்த டிரம்ப், போர்க்களத்தில் அமெரிக்காவின் வெற்றிக்கு 10 இற்கு 15 மதிப்பெண்களை வழங்குவதாகத் தெரிவித்தார்.

 

“ஈரானில் தற்போது யார் தலைவராக வர வேண்டும் என விரும்புகிறார்களோ, அவர்கள் இறுதியில் சடலமாகவே போகிறார்கள்” என அவர் ஈரானின் தலைமைத்துவத்தைக் கேலி செய்தார். கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் அமெரிக்காவையும் உலக நாடுகளையும் அச்சுறுத்தி வந்ததாகவும், தற்போதைய நடவடிக்கைகளின் மூலம் ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஏவுதளங்கள் மிகத் துரிதமாக அழிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

வெனிசுலா ஒப்பந்தம் மற்றும் உள்நாட்டு நகர்வுகள்

மத்திய கிழக்கில் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கும் அதேவேளை, வெனிசுலா நாட்டுடன் இணக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். வெனிசுலாவில் இருந்து பல மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்கா பெற்றுக்கொள்வதாகவும், இது இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் பாரிய நன்மையளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும், உள்நாட்டில் அமெரிக்க மக்களின் மின்சாரக் கட்டணங்களைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து ‘Rate Payer Protection Pledge’ எனும் புதிய ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திட்டுள்ளார். அத்துடன், 101 வயதான இரண்டாம் உலகப்போர் வீரர் ஒருவருக்கு அமெரிக்காவின் அதியுயர் விருதான ‘Medal of Honor’ பெற்றுக் கொடுக்கப்பட்டமையையும் அவர் தனது உரையில் நினைவுகூர்ந்தார்.

Recommended For You

About the Author: admin