பருத்தித்துறை மீனவருக்கு அள்ளிக்கொடுத்த கடல்

( யாழ் நிருபர் ரமணன் )

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர் க.குணராஜாவின் வலையில் 14 சுறாக்கள் நேற்று மாலை சிக்கின.

குறித்த சுறாக்களின் நிறை 235 கிலோ கிராம் ஆகும். இவற்றின் கொள்வனவு விலை 2,25,000 ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த 14 சுறாக்களும் தென்னிலங்கையைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு ஏலத்தில் விற்கப்பட்டன.

Recommended For You

About the Author: webeditor