777 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் பெண் கைது

( யாழ். நிருபர் ரமணன் )

யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணொருவர் இன்று காலை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து 35 வயது மதிக்க தக்க பெண் கைக் குழந்தையுடன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த கைபையினை சோதனை செய்து பார்க்கும் அதில் 777 போதை மாத்திரைகள், 78 கஞ்சா பைக்கெற்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

குறித்த பெண்ணையும், கைக்குழந்தையையும் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்புப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Recommended For You

About the Author: webeditor