பிரித்தானியாவில் கொலைசெய்யப்பட்ட இலங்கைப் பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரித்தானியாவில் கொலைசெய்யப்பட்ட இலங்கைப் பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் தொடர்பான பிந்திய தகவல்களை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கார்டிப் பகுதியில் தனது முன்னாள் மனைவியை குத்திக் கொலை செய்தாக இலங்கையரான கணவன் நீதிமன்றில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

கடந்தாண்டு இலங்கையை சேர்ந்த 32 வயதான நிரோதா நிவுன்ஹெல்ல படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

 

இந்நிலையில் கொலையுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட முன்னாள் கணவனான 37 வயதான திசார வேரகலகே குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி டேனியல் வில்லியம்ஸ் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அவருக்கான இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin