யாழில் செவன மானிய வீட்டுத் திட்டத்தின் முதலாம் கட்டக் கொடுப்பனவு வழங்கல்

(ரமணன்)

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் யாழ்.மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 36 பயனாளர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான செவன மானிய வீட்டுத் திட்டத்தின் முதலாம் கட்டக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், காணி மேலதிக அரசாங்க அதிபர் ( காணி ) எஸ்.முரளிதரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு முதற்கட்டமாக 12 நபர்களுக்கு மானிய உதவிகள் வழங்கப்பட்டன.

 

Recommended For You

About the Author: webeditor