யாழில் கோர விபத்து; முதியவர் உடல் சிதறிப் பலி!

யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தியில் ரயில் மோதி பாஷையூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்.

இன்று காலை ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றது. ரயிலில் மோதிய முதியவர் சுமார் 100 மீற்றர்கள் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறிப்பலியானார்.

ரயிலில் மோதி உயிரிழந்த முதியவரின் சிதைவடைந்த உடல் அதே ரயிலில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

Recommended For You

About the Author: webeditor