யாழில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞனின் குடும்பத்திற்கு அரசினால் இழப்பீடு

மின்னல் தாக்கி 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் யாழ் தெல்லிப்பளை அம்பனை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அவ் இளைஞன் யாழ்.தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம்
தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவு கொண்டு சென்ற வேளையிலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இழப்பீடு
உயிரிழந்த இளைஞருக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் கூறியுள்ளார்.

அவ் இளைஞனின் இழப்பீட்டு நிதியினை பெற்று கொடுப்பதற்குரிய அனைத்து விபரங்களும் தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் இறப்பு சான்றிதழ் கிடைக்கப்பெற்றதுடன் அரசினால் வழங்கப்படும் இரண்ரரை லட்சம் ரூபா இழப்பீட்டு நிதியினை உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor