பொன்னியின் செல்வன்
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் என இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
மணி ரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்தது.
தமிழக வசூல்
பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களை முழு திருப்த்தி படுத்தியுள்ளது. உலகளவில் இரண்டே நாளில் ரூ. 150 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
. இந்நிலையில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 48 கோடிக்கும் மேல் பொன்னியின் செல்வன் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.